/* */

தொண்டி: மணல் கடத்திய கும்பல் வாகனங்களை போட்டுவிட்டு தப்பி ஓட்டம்

தொண்டி அருகே நள்ளிரவு சட்ட விரோதமாக மணல் கடத்திக் கொண்டிருந்த கும்பல் வாகனங்களை விட்டு விட்டு தப்பி ஓட்டம் பிடித்தது.

HIGHLIGHTS

தொண்டி: மணல் கடத்திய கும்பல் வாகனங்களை போட்டுவிட்டு தப்பி ஓட்டம்
X

தொண்டி அருகே, மணல் கடத்திய கும்பல் விட்டுச் சென்ற வாகனங்கள். 

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே, எம்.ஆர். பட்டிணம் கிராமத்தில் நள்ளிரவில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தொண்டி காவல் ஆய்வாளர் முருகேசன் உட்பட போலீஸார் கூட்டாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு டிராக்டரில் மணல் கடத்திக் கொண்டிருந்த கும்பல், போலீஸாரை கண்டதும் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஒடியது. இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 1 டிராக்டர் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களையும் கைப்பற்றி, வழக்கு பதிந்து தப்பி ஓடிய மணல் கடத்தல் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 10 April 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  4. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  5. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  7. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  8. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்