/* */

ஆர்.எஸ் மங்கலம் அருகே இடி தாக்கி பெண் உயிரிழப்பு

ஆர்.எஸ் மங்கலம் அருகே இடி தாக்கி பெண் உயிரிழப்பு. சோகத்தில் மூழ்கிய கிராமம்.

HIGHLIGHTS

ஆர்.எஸ் மங்கலம் அருகே இடி தாக்கி பெண் உயிரிழப்பு
X

இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் ஒன்றியம் மேலச்சித்தூர்வாடி கிராமத்தைச் சேர்ந்த பாலு மனைவி மார்க்ரேட் மேரி (45).இவர் வயலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் பலத்த காற்றுடன் கூடிய மழையின் போது இடி மின்னல் தாக்கியதில் மார்க்ரேட் மேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மார்க்ரேட் மேரியின் கணவர் பாலு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் மூத்த மகள் பௌலின்ரோஷி (24) வுக்கு இன்னும் சில தினங்களில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், ஏற்கனவே தந்தை இல்லாத நிலையில் தாய் திடீரென இடி மின்னல் தாக்கி உயிரிழந்த நிலையில் செய்வதறியாமல் இரு பெண் பிள்ளைகள் தவித்து வருவது, இக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டாட்சியர் முருகவேல் மற்றும் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Jun 2021 1:24 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?