/* */

வியாபாரியிடம் ரூ.65 ஆயிரம் லஞ்சம்: நுகர்பொருள் வாணிப கழக ஊழியர் கைது

திருவாடானை அருகே நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் வாங்கிய நுகர்பொருள் வாணிப கழக பணியாளர் கைது.

HIGHLIGHTS

வியாபாரியிடம் ரூ.65 ஆயிரம் லஞ்சம்: நுகர்பொருள் வாணிப கழக ஊழியர் கைது
X

திருவாடானை அருகே நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் வாங்கிய நுகர்பொருள் வாணிப கழக பணியாளர் ராம்ராஜை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

நெல் கொள்முதல்: லஞ்சம் வாங்கிய நுகர்பொருள் வாணிப கழக பணியாளர் ராம்ராஜ் கைது.

இராமநாதபுரம் திருவாடானை அருகே உள்ள பாண்டுகுடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய கூடுதலாக பணம் கேட்பதாக தொடர்ந்து புகார் வந்தது.

இந்நிலையில் வியாபாரி கணேசன் கொடுத்த புகாரின் பேரில் இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி உண்ணி கிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் ஆகியோர் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து நுகர்பொருள் வாணிப கழக பணியாளர் ராம்ராஜை கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் அவரிடமிருந்து ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ராம்ராஜிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Feb 2022 2:17 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  5. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  6. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  9. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு