/* */

இராமநாதபுரத்தில் திருடுபோன ரூ. 7 லட்சம் செல்போன்கள் கண்டுபிடிப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில், திருடுபோன ரூ. 7 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

HIGHLIGHTS

இராமநாதபுரத்தில் திருடுபோன ரூ. 7 லட்சம் செல்போன்கள் கண்டுபிடிப்பு
X

திருடு போன ரூ7 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை, உரியவர்களிடம் இராமநாதபுரம் எஸ்பி ஒப்படைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில், பொதுமக்களிடம் திருடுபோன 311 செல்போன்கள் குறித்து, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அவற்றை கண்டுபிடிப்பதற்காக, மாவட்ட எஸ்பி கார்த்திக் தனிப்படை ஒன்றை அமைத்திருந்தார். தனிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தி, 110 விலை உயர்ந்த செல்போன்களை கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட 110 செல்போன்களும், இன்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், உரியவர்களிடம் மாவட்ட எஸ்பி கார்த்திக் ஒப்படைத்தார். ஒப்படைக்கப்பட்ட செல்போன்கள், ரூ 7 லட்சம் மதிப்பு உடையது என போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட எஸ்பி கார்த்திக் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், செல்போன் விற்பனை நிலையங்களில் பழைய செல்போன்களை விலைக்கு வாங்கும்போது, அந்த செல்போன்கள் அவர்களுடையதானா என்பதை அறிந்து அவர்களது ஆதார் எண் பெற்றுக்கொண்டு பழைய செல்போன்களை வாங்கவோ விற்கவோ செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

Updated On: 29 Sep 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  4. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  5. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  7. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  10. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்