/* */

இணையத்தில் வீடியோ பார்த்து சாராயம் காய்ச்சிய மகன் கைது -தந்தை தப்பியோட்டம்

இராமநாதபுரம் அருகே யூடியூப் பார்த்து வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சிய மகன் கைது. தந்தை தப்பி ஓட்டம்.

HIGHLIGHTS

இணையத்தில் வீடியோ பார்த்து சாராயம் காய்ச்சிய மகன் கைது -தந்தை தப்பியோட்டம்
X

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தளர்வில்லா முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் அருகே எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 5 பேர் சாராயம் காய்ச்சியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து சாராயம் மற்றும் அதற்கான பொருட்கள், குக்கர் முதலியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பின்னரும் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கேணிக்கரை போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் பவுனு என்பவரின் மகன் மகாராஜா(65) என்பவர் தனது மகன் சக்தி(21) என்பவருடன் சேர்ந்து குக்கரில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்ததை போலீசார் கண்டனர்.போலீசாரை கண்டதும் மகாராஜா தப்பி ஓடிவிட்டார்.

சக்தியை மடக்கி பிடித்த போலீசார் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய குக்கர் மற்றும் சாராய ஊரல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய அவரின் தந்தை மகாராஜாவை போலீசார் தேடிவருகின்றனர். ராமநாதபரத்தில் கடந்த சில தினங்களாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்து வரும்நிலையில் உயிர்பலி ஏற்படும் முன்னர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 11 Jun 2021 2:59 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. நாமக்கல்
    பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நாமக்கல் ஆட்சியர்...