/* */

தொண்டி அருகே கபடி போட்டியில் இரு பிரிவினர் இடையே கடும் மோதல்

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கபடி போட்டியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்தனர்.

HIGHLIGHTS

தொண்டி அருகே கபடி போட்டியில் இரு பிரிவினர் இடையே கடும் மோதல்
X

விசாரணையில் ஈடுபட்ட போலீசார்.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுக்கோட்டையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியின் போது முன்விரோதம் காரணமாக இரு பெண்கள் உட்பட 6 பேருக்கு சராமாரி அரிவாள் வெட்டு ஏற்பட்டது. திடீரென்று ஒருவருக்கொருவர் கம்பு மற்றும் அரிவாளால் தாக்கிக் கொண்டனர். இதில் பலத்த காயமடைந்த காளிமுத்து, சக்திவேல், சகாதேவன், கலைச்செல்வி, மணிகண்டன், கமலேஷ் உள்பட 6 பேரும் தொண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புதுக்கோட்டையில் பதற்றம் நிலவி வருவதால் ஏராளமான அதிரடிப்படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த திருவாடனை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜான் பிரிட்டோ தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  3. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  4. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  5. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  8. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  9. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை
  10. வீடியோ
    Congress vs BJP இரண்டு கட்சிக்கும் வித்தியாசம் என்ன ?#annamalai...