/* */

தொண்டி அருகே கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் படகு கவிழ்ந்து உயிரிழப்பு

தொண்டி அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர், படகு கவிழ்ந்து உயிரிழந்தார்.

HIGHLIGHTS

தொண்டி அருகே கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் படகு கவிழ்ந்து உயிரிழப்பு
X

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளை மீனவர் காலனியைச் சேர்ந்த சுப்பையா மகன் ஆறுமுகம், மற்றும் லோகமுத்து மகன் காளி ஆகியோர் இன்று மாலை நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது பலத்த காற்று வீசியதில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஆறுமுகம், காளி இருவரும் கடலில் மூழ்கி தத்தளித்தனர். இதனை கண்ட சக மீனவர்கள் உடனடியாக சென்று இருவரையும் மீட்டு தொண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மீனவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், ஆறுமுகம் ஏற்கனவே உயிரிழந்ததாகவும், தெரிவித்தனர். உயிருக்குப் போராடிய நிலையில் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தொண்டி மெரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 23 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  4. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  5. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  7. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்