/* */

முள்ளிமுனை கிராமத்தில் தேசிய பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்வு

முள்ளிமுனை கிராமத்தில் தேசிய பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்வு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

முள்ளிமுனை கிராமத்தில் தேசிய பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்வு
X

முள்ளிமுனை கிராமத்தில்,  தேசிய பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்வு மாவட ஆட்சியர் தலைமயில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா முள்ளிமுனை கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்வு, மாவட்ட ஆட்சியர் (பொ) காமாட்சி கணேசன் தலைமையில் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர் முன்னிலை வகித்தார். தேசிய பேரிடர் மீட்பு குழு நிர்வாகிகள், சுகாதார துறை அலுவலர்கள் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
முதலில் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 மற்றும் தீ அணைப்பு மீட்பு வாகனத்தில் ஏற்றி வந்து பேரிடர் மீட்பு காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பது போல ஒத்திகை நடந்தது. இதில் தீயணைப்பு திருவாடானை நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையில் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு, பேரிடர் மீட்பு கட்டிடத்தில் பொதுமக்களுக்கு பேரிடர் காலத்தில் செய்யவேண்டியவற்றை செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பின்னர் கடற்கரையோரம், ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Oct 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!