/* */

திருவாடானையில் புதிதாக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா

அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு திருவாடானை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவாடானையில் புதிதாக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா
X

அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு திருவாடானை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு திருவாடானை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வழக்கறிஞர் சங்க வழக்கறிஞர் கார்த்திகேயன் மாவட்ட அரசு வழக்கறிஞராக தமிழக அரசு நியமித்தது. அதனை தொடர்ந்து அவர் பணியாற்றி வரும் நிலையில் திருவாடானை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சிவராமன் தலைமையில் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் தனபால் முன்னிலையில் பாராட்டு விழா இன்று திருவாடானை நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள வழக்கறிஞர் சங்க உள் அரங்கில் நடைபெற்றது.

இந்த பாராட்டு விழாவில் வழக்கறிஞர் சங்க துணை தலைவர் வழக்கறிஞர் ஜிப்ரி உட்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் தாங்கள் அரசு வழக்கறிஞராக தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமைக்குரியதும், வரவேற்கத்தக்கதும் என்று வாழ்த்தி பேசினர். மேலும் வழக்கறிஞர் கீதா மகிலா நீதிமன்ற அரசு வழக்கறிஞராகவும், வழக்கறிஞர் சபரிநாதன் மனித உரிமை அரசு வழக்கறிஞராகவும் தேர்வு செய்தற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இறுதியாக வழக்கறிஞர் சங்க செயலாளர் ராம்குமார் நன்றி உரையாற்றினார்.

Updated On: 26 Nov 2021 6:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  5. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  6. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு