/* */

ஆதார் அட்டை: திருவாடனையில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

பணியாளர் விடுமுறையில் சென்றால் அதற்கான மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

HIGHLIGHTS

ஆதார் அட்டை: திருவாடனையில்  தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
X

திருவாடனையில் ஆதார் அட்டை பதிவு செய்ய வந்த பொதுமக்கள் மையத்தில் ஊழியர் இல்லாததால் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாடானை தாலுகாவில் ஆதார் அட்டை எடுக்கும் மையம் தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள இ-சேவை மைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஒரு நாளைக்கு 20 முதல் 50 பேருக்கு மட்டுமே ஆதார் அட்டைக்கான பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தேதியை ஒதுக்கி டோக்கன் கொடுக்கப்படும். இந்நிலையில், இன்று டோக்கன் வழங்கப்பட்டுள்ள அனைவரும் காலையில் ஆதார் மையத்திற்கு வந்து காத்திருந்தனர். ஆனால், அங்கு பணிக்கு வரும் ஊழியர் அவசர விடுப்பில் சென்றுவிட்டதால், பணிகள் தொடங்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பல முறை அலைந்து டோக்கன் பெற்று ஆதார் அட்டை எடுக்க வந்து காத்திருக்கும் நிலையில், பணியாளர் விடுமுறையில் சென்றதால், அதற்கான மாற்று பணியாளரை ஏற்பாடு செய்ய வேண்டுமென வலியுறுத்தி, தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தாசில்தார் மற்றும் அதிகாரிகள் வருவதற்கு சற்று நேரம் இருந்த நிலையில், ஆதார் எடுப்பதற்கு மீண்டும் நேரம் ஒதுக்கி டோக்கன் தருவதாக ஊழியர்கள் கூறியதன் பேரில், அனைவரும் மக்களும் கலைந்து சென்றனர்.ஆதார் எடுக்க தினமும் 50 முதல் 60 -க்கும் மேற்பட்ட ஒரு சிறு குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்து அலைவதால், ஆங்காங்கே ஆதார் எடுக்கும் முகாம்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 14 Sep 2021 11:20 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  2. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  3. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  5. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  6. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  7. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  10. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்