/* */

இராமநாதபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற மரநாய் வாகனம் மோதி உயிரிழப்பு

இராமநாதபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற அரிய வகை மரநாய் வாகனம் மோதி உயிரிழந்தது.

HIGHLIGHTS

இராமநாதபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற மரநாய் வாகனம் மோதி உயிரிழப்பு
X

பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் காவல் சோதனைச்சாவடி அருகே சுமாா் இரண்டரை அடி நீளமுள்ள மர நாய் தலை நசுங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தது.

இராமநாதபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற அரிய வகை மரநாய் வாகனம் மோதி உயிரிழந்தது.

இராமநாதபுரம் நகா், ஊரக பகுதிகளில் மிக அரிய வகை உயிரினமான மரநாய்கள், குறிப்பாக பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதி நகா் பகுதியில் நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. இந்நிலையில், பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் காவல் சோதனைச்சாவடி அருகே சுமாா் இரண்டரை அடி நீளமுள்ள மர நாய் தலை நசுங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தது.

தகவல் அறிந்து அங்கு வந்த, இராமநாதபுரம் உதவி வன பாதுகாவலா் கணேசலிங்கம் தலைமையில் வனவா்கள் மரநாயின் சடலத்தை மீட்டனா். சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. உயிரிழந்த பெண் மரநாய்க்கு சுமாா் 2 வயதிருக்கலாம் என வன அலுவலா்களால் கூறப்படுகிறது, இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் மரநாய் அப்பகுதியில் புதைக்கப்பட்டது.

Updated On: 18 Oct 2021 1:39 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?