/* */

கண்மாய் வழியாக சிக்கிய 15 கிலோ எடை கொண்ட மீன்

திருவாடானை அருகே ஆதியூர் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீரில் 15 கிலோ எடை கொண்ட மீனை பிடித்த இளைஞர்கள்.

HIGHLIGHTS

கண்மாய்  வழியாக சிக்கிய  15 கிலோ எடை கொண்ட மீன்
X

15 கிலோ எடையுள்ள மீனை பிடித்த இளைஞர்கள் 

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. கடந்த வருடம் மழையினால் கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல கண்மாய்களில் மீன் வளர்க்கப்பட்டது.

வளர்த்த மீன்களை கனமழையின் காரணமாக ஏலம் விடாத நிலையில், தற்பொழுது இந்த பகுதிகளில் அதிக மழை பெய்ததின் காரணமாக அனைத்து கண்மாய்களும் நிரம்பி தண்ணீர் கரைபுரண்டு வெளியேறுகிறது. அப்படி ஆதியூர் கண்மாயில் தண்ணீர் வெளியேற்றப்படும் இடத்தில் இளைஞர்கள் ஆர்வமுடன் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

அப்போது திருவெற்றியூர் கிராமத்தை சேர்ந்த நவநீதன், அஜித், தண்டபாணி இவர்கள் மீன்பிடித்த பகுதியில் 15 கிலோ எடை கொண்ட பெரிய மீன் தென்பட்டது. உடன் சமயோசிதமாக செயல்பட்டு கம்பால் அடித்து மூவரும் அந்த பெரிய மீனை தப்பிக்க விடாமல் பிடித்தனர். கண்மாய் பகுதியில் இவ்வளவு பெரிய மீன் வேறு எங்குமே கிடையாது. கடலில் தான் இதுபோன்ற பெரிய மீன்களை காண முடிந்த நிலையில் கண்மாயில் இவ்வளவு பெரிய மீனை பார்த்த பொதுமக்கள், அதிசயத்து பார்த்தனர்.

Updated On: 15 Nov 2021 9:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...