/* */

சிவராத்திரி விழாவிற்கு வந்தவர் கண்மாயில் மூழ்கி பலி

சிவராத்திரி விழாவிற்கு வந்தவர் கண்மாயில் மூழ்கி பலி
X

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் சிவராத்திரி திருவிழாவிற்கு வந்தவர் கண்மாயில் மூழ்கி பலியானார்.

திருவாடானை தாலுகா கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரது மகன் குமார், இவர் தூத்துக்குடி பகுதியில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு சிவராத்திரியை முன்னிட்டு கடம்பாக்குடி கண்மாய்க்குள் உள்ள அய்யனார் கோவிலுக்கு சாமி கும்பிட கண்மாய் நீரில் நீந்தி செல்லும் போது கண்மாயில் இருந்த தாமரை கொடிகள் சிக்கியதில் மூச்சு திணறி பலியானார்.

இது குறித்து அறிந்ததும் திருவாடானை தீயணைப்பு மீட்பு படையினர் 2 மணி நேரத்துக்கும் மேலாக தேடி இறந்தவர் உடலை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குமாருக்கு திருமணமாகி ஒரு சில மாதங்களே ஆன நிலையில் நீரில் மூழ்கி இறந்தது உறவினர்களடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 12 March 2021 10:55 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஆரணி
    ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி
  8. மாதவரம்
    குடிநீர் தொட்டி பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
  9. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 1,260 மூட்டை பருத்தி ரூ. 30 லட்சம்...
  10. கலசப்பாக்கம்
    பருவத மலையில் கிரிவலம் வந்த பக்தர்கள்