/* */

கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழிந்த பின்னரே தீர்த்தங்கள் திறக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு

கொரோனா நோய்த்தொற்று முழுமையாக குறைந்த பின்னரே 22 புண்ணிய தீர்த்தங்கள் திறக்கப்படும். அமைச்சர் சேகர்பாபு பேட்டி.

HIGHLIGHTS

கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழிந்த பின்னரே தீர்த்தங்கள் திறக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு
X

இராமேஸ்வரம் இராமநாதசாமி கோயிலில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.

கொரோனா நோய்த்தொற்று முழுமையாக குறைந்த பின்னரே 22 புண்ணிய தீர்த்தங்கள் திறக்கப்படும். அமைச்சர் சேகர்பாபு பேட்டி.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இராமேஸ்வரம் இராமநாதசாமி கோயிலுக்கு ஆய்வு செய்ய வந்த அமைச்சர் சேகர் பாபுவுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இராமநாதசாமியையும் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாளையும் தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து சென்றவர் திருக்கோவிலில் உள்ள தங்கத்தேர் மற்றும் வெள்ளித்தேர், உள்ளிட்டவை பழுது ஏற்பட்டு பல வருடங்களாக செயல்பாட்டில் இல்லாதது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து கோவிலில் உள்ளே தீர்த்த கிணறுகளை பார்வையிட்டார். பின்னர் இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு: இராமேஸ்வரம் இராமநாதசாமி திருக்கோவிலில் உள்ள ஒரு தங்கத் தேர், ஒரு வெள்ளித்தேர் மற்றும் மூன்று மரத்தேர்கள் பயன்பாடின்றி கிடப்பதாகவும் அதை உடனடியாக சீர் செய்து ஓட வைத்து பக்தர்களை இன்பக் கடலில் மூழ்கடிப்பதே இந்து சமய அறநிலையத் துறையின் நோக்கமாகும். கோவிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்கள் பக்தர்கள் நீராட அனுமதிப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, கொரோனா நோய்த்தொற்று முற்றிலுமாக ஒழிந்த பின்னரே தீர்த்தங்கள் திறக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Updated On: 26 Sep 2021 2:33 PM GMT

Related News