/* */

இராமநாதபுரம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல்

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

இராமநாதபுரம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல்
X

இராமநாதபுரம் மாவட்டம், எஸ்டிபிஐ கட்சி சார்பில் அண்ணா சிலை முன்பு மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் கிழக்கு எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், மாவட்ட செயலாளர்கள் அபுல் கலாம் ஆசாத், நஜூமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் கொண்டுவரப்பட்ட விவசாய திருத்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும். டெல்லியில் 10 மாதங்களாக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டு இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

மத்திய பாஜக அரசு சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர். மாவட்ட பொருளாளர் அசன் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முகம்மது சுலைமான், ஹனீப், நூர் ஜியாவுதீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Sep 2021 4:06 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  5. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  6. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  7. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  9. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்