Begin typing your search above and press return to search.
இராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
இராமநாதபுரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து பாதையத்திரை நடைபெற்றது.
HIGHLIGHTS
இராமநாதபுரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் பாதையத்திரை நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கேஸ் விலை உயர்வு, பணவீக்கம், தவறான, கல்விக்கொள்கை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மத்திய பாஜக அரசை கண்டித்து இராமநாதபுரம் அரண்மனை முன்பு பாதையாத்திரை செல்லும் போராட்டத்தை காங்கிரசார் நடத்தினர்.
மாவட்டத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் கலந்து கொண்டு பாதை யாத்திரையை தொடங்கி வைத்தார். இந்த யாத்திரை இராமநாதபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது.