Begin typing your search above and press return to search.
தமிழக மீனவர்கள் 14 பேர் மீண்டும் கைது: தொடர் சம்பவத்தால் அச்சம்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 14 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
HIGHLIGHTS
இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், எழுவை தீவு கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மேலும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர், அவர்களது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். மீனவர்கள் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர். விசாரணைக்கு பின் மீனவர்களை யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.