/* */

ஓடும் பேருந்தில் ரவுடிகளுக்கு அரிவாள் வெட்டு: பரமக்குடியில் பயங்கரம்

பரமக்குடி அருகே ஓடும் பேருந்தில் ரவுடிகளுக்கு அரிவாள் வெட்டு. 10 பேர் கொண்ட கும்பல் பயங்கரம்.

HIGHLIGHTS

ஓடும் பேருந்தில் ரவுடிகளுக்கு அரிவாள் வெட்டு: பரமக்குடியில் பயங்கரம்
X

பரமக்குடியில் அரிவாள் வெட்டில் காயமடைந்த ரவுடிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரமக்குடியில் ஓடும் பேருந்தில் ரவுடிகளை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரியமங்கலம் என்ற இடத்தில் 2019 ல் மணிகண்டன் என்பவர் கொலை வழக்கில் மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார் 21, வழிவிட்டான் 18, அழகு முருகன் 18, முத்துமுருகன் 19 ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகளாக உள்ளனர்.

இந்த நான்கு பேர் மற்றும் பழனிமுருகனின் தந்தை தர்மலிங்கம் என ஐந்து நபர்கள் இந்த வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நேரில் சென்று ஆஜராகி கையெழுத்து இட சென்றுள்ளனர். மீண்டும் இராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளனர். பேருந்தை தவமணி என்பவர் ஓட்டியுள்ளார். நடத்துனராக சக்திவேல் என்பவர் பணியில் இருந்துள்ளார். பேருந்தில் சுமார் 45 பயணிகள் பயணித்துள்ளனர்.

பேருந்து பரமக்குடி அடுத்த தெளிசாத்தநல்லூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது இருவர் பேருந்தை மறித்து உள்ளனர். ஆனால் ஓட்டுநர் நிற்காமல் சென்று விட்டார். தொடர்ந்து கார், டூவிலர்களில் பின்தொடர்ந்த பத்து பேர் கொண்ட மர்ம கும்பல் கமுதக்குடி என்ற இடத்தில் பேருந்தை வழிமறித்து பேருந்தினுள் ஏறி நால்வரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பழனிக்குமார், அழகு முருகன், வழிவிட்டான் ஆகிய மூவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்து ஓடி உள்ளனர்.

காயமடைந்த நால்வரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகன் விசாரணை செய்தார். பரமக்குடியில் பட்டப்பகலில் ஓடும் பேருந்தை வழிமறித்து ரவுடிகளை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 11 Dec 2021 5:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...