/* */

முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி: வாடி வாசல் அமைக்கும் பணி தொடங்கியது

இராமநாதபுரத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வாடிவாசல் அமைக்கும் பணி தொடங்கியது

HIGHLIGHTS

முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி: வாடி வாசல் அமைக்கும் பணி தொடங்கியது
X

இராமநாதபுரம் மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பொக்காரனேந்தல் கிராமத்தில்  நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு வாடிவாசல் அமைக்கும் பணி

இராமநாதபுரத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி. வாடி வாசல் அமைக்கும் பணி தொடங்கியது.

இராமநாதபுரத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு வருகிற மே 25-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான வாடிவாசல் அமைக்கும் பணியை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பொக்காரனேந்தல் கிராமத்தில் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு சமத்துவ ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இதில் தமிழகத்திலுள்ள முக்கியமான நகரங்களில் இருந்து தலைசிறந்த 800 காளைகள் பங்கேற்க இருக்கிறது. 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பிரம்மாண்ட மைதானம் தேர்வு செய்யப்பட்டு இன்று வாடிவாசல் அமைக்கும் பணி துவங்கி வைக்கப்பட்டது. வாடிவாசல் அமைக்கும் பணியை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 May 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  2. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  5. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  6. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  7. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  8. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!
  9. நாமக்கல்
    முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
  10. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!