/* */

ஓரிரு மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை

ஓரிரு மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஓரிரு மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை
X

சென்னை வானிலை ஆய்வு மையம்.

மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Updated On: 22 April 2022 11:13 AM GMT

Related News