/* */

புதுக்கோட்டை அருகே கிணற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே கிணற்றில் குளித்த போது தலையில் அடிபட்டு தண்ணீரில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை அருகே கிணற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு
X

புதுக்கோட்டை அருகே கிணற்றில் குளித்த போது தலையில் அடிபட்டு தண்ணீரில் மூழ்கி இறந்துபோன ஆசாத்தின் பழைய புகைப்படம்.

புதுக்கோட்டை அருகே கிணற்றில் குளித்த போது தலையில் அடிபட்டு தண்ணீரில் மூழ்கி கல்லூரி இளைஞர் பலி.

புதுக்கோட்டை மாவட்டம் புல்வயல் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மகன் ஆசாத் (20) சென்னையில் இளங்கலைப் படிப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகைக்காக ஊருக்கு திரும்பிய ஆசாத், தனது நண்பர்களுடன் பெருமாநாடு பகுதியிலுள்ள விவசாய கிணற்றுக்கு தனது 4 நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது ஆசாத் கிணற்றுக்குள் பல்டி அடித்துள்ளார்.

அப்போது அவரது தலை பகுதி கிணற்றின் சுவர்ப் பகுதியில் எதிர்பாராத விதமாக மோதி உள்ளது. இதில் நிலைதடுமாறிய ஆசாத் கிணற்றுக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அன்னாவாசல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 May 2022 1:34 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?