/* */

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் : முன்னாள் அமைச்சர் சொல்றார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ஊராட்சி மன்றத்தலைவர்கள் உட்பட 48 பதவிகளுக்கு அக்.9-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்  : முன்னாள் அமைச்சர் சொல்றார்
X

மாவட்ட ஊராட்சி குழு 9-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அழகு சுந்தரி தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். உடன் முன்னாள் சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர்,அன்னவாசல் ஒன்றிய குழுத்தலைவர் வீ.ராமசாமி  

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறு கிறது. அதே போன்று, தமிழகத்தில் உள்ள 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ஊராட்சி மன்றத் தலைவர்கள் உட்பட 48 பதவிகளுக்கு அக்.9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

அதில், மாவட்ட ஊராட்சி குழு 9-ஆவது வார்டு உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் அதிமுக வேட்பாளராக அழகு சுந்தரி அறிவிக்கப்பட்டார். அன்னவாசலில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஊர்வலமாக சென்று, அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அதிமுக வேட்பாளர் அழகு சுந்தரி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இது குறித்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் , ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். அதிமுக வலுவோடு இருக்கும் கட்சி என்றார். வேட்பு மனு தாக்கலின் போது, அன்னவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 22 Sep 2021 12:42 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. நாமக்கல்
    பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நாமக்கல் ஆட்சியர்...