/* */

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர் -அகற்றிய காவல்துறையினர்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பிரம்மாண்ட பிளக்ஸ் பேனரை அகற்றிய காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு.

HIGHLIGHTS

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்  -அகற்றிய  காவல்துறையினர்
X

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் திருமயம் பேருந்து நிலையம் பகுதியில் தனியார் கட்டிடத்தில் இருந்த மிகப்பெரிய விளம்பரப் பேனர் பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்த விழும் நிலையில் இருந்தது.

இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதனை அகற்ற சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் யாரும் முன்வராததால் தகவலறிந்த திருமயம் ஊராட்சி நிர்வாகம் உதவியுடன் திருமயம் போலீஸார் சேதமடைந்த விளம்பரப் பேனரை அகற்ற முன் வந்தனர். இதனை தொடர்ந்து காற்றில் சேதமடைந்த விழும் நிலையில் இருந்த விளம்பரப் பேனரை காவல்துறையினர் அந்த பேனரை அகற்றினர். பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்த விழும் நிலையில் இருந்த விளம்பரப் பேனரை அகற்றிய காவல்துறைக்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Updated On: 7 Jun 2021 1:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்
  3. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. ஆரணி
    ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி
  10. மாதவரம்
    குடிநீர் தொட்டி பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை