/* */

புதுக்கோட்டையில் நகைகள் கொள்ளை; இருவர் கைது

புதுக்கோட்டையில் பல்வேறு செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில்  நகைகள் கொள்ளை; இருவர் கைது
X

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கடியாபட்டியில் தனியாக சென்ற பெண்ணை தாக்கி 3 பவுன் தங்கச் சங்கிலியை பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து குற்றப்பிரிவு சப்.இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மேலும் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.

அது சமயம் பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரித்த போது அவர்கள் செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் திருமயம் , கல்லல், அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் தனியாக சென்ற பெண்களை தாக்கி 8 பவுன் நகைகளை பறித்ததுள்ளனர். அவர்களிடமிருந்த 8 பவுன் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் இவர்கள் மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியைச்சேர்ந்த கம்பர்மலைப்பட்டி அய்யனார்(29), கீழவளவு ராஜவீதி அழகர்(38) என்பது தெரிந்தது. இவர்களை கைது செய்த திருமயம் போலீசார் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

Updated On: 21 July 2021 4:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?