/* */

வருவாய் ஆய்வாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை தடுக்கச் சென்ற திருமயம் வருவாய் ஆய்வாளர் செந்தில் குமாரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தல்

HIGHLIGHTS

வருவாய்  ஆய்வாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் திருமயம் வருவாய் ஆய்வாளரை தாக்கிய மணல் கடத்தல் கும்பலை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

வருவாய் அலுவலர் செந்தில்குமாரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நேற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை தடுக்கச் சென்ற திருமயம் வருவாய் ஆய்வாளர் செந்தில் குமாரை மணல் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர்.இதையடுத்து செந்தில்குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசு ஊழியரை தாக்கிய மணல் கடத்தல் கும்பலை கைது செய்ய வலியுறுத்தி இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில் ஒரு பகுதியாக புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர் சுப்பையா தலைமையில் 50க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தாக்கிய மணல் கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 9 March 2022 3:38 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்