/* */

மே.1 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளில் மேதினத்தையொட்டி கிராமசபைக்கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் அறிவிப்பு

HIGHLIGHTS

மே.1 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் 1.5.2022 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அறிவித்துள்ளார்.

உலக தொழிலாளர் தினமான 01.05.2022-ஆம் தேதியன்று காலை 11.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், சுகாதாரம் (பள்ளிக் கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி கழிப்பறைகள்), ஊரக பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம்.நிதி செலவின விவரங்கள், மக்கள் திட்டமிடல் இயக்கம் ஊட்டசத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), விரிவான கிராம சுகாதார திட்டத்தைப் பற்றி விவாதித்தல், ஜல் ஜீவன் திட்டம், வேளாண் – உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன.

மேற்குறிப்பிட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிக அளவில் கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டத்தைச் சிறப்பாக நடத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.

Updated On: 27 April 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  8. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  9. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  10. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...