புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் உருவச்சிலைக்கு உதயநிதிஸ்டாலின் மரியாதை
Udayanithistalin pays homage to the statue of the Pudukkottai Samasthana king
HIGHLIGHTS
மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மன்னர் உருவச்சிலைக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் (26.06.2022) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினிடம் மன்னர் குடும்பத்தினர் மற்றும் நூற்றாண்டு விழாக்குழுவினர், புதுக்கோட்டையில் மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களுக்கு அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைத்திட அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன்அரசு, முன்னாள் திருச்சி மாநகர மேயர் சாருபாலா தொண்டைமான், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், விழாக்குழு செயலாளர் ஆர். சம்பத்குமார், மன்னர் குடும்பத்தினர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.