/* */

கோவிட் நிவாரணத்தொகை: இலங்கை தமிழர்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 9.1.2015 -ஆம் தேதிக்கு முன் இலங்கையிலிருந்து தமிழகம் வந்தவர்கள் மட்டுமே இலங்கை தமிழராவர்

HIGHLIGHTS

கோவிட் நிவாரணத்தொகை: இலங்கை தமிழர்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இலங்கை தமிழர் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் கோவிட்-19 நிவாரண உதவித் தொகை ரூ.4,000 பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு வெளியே வசிக்கும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கோவிட்-19 (ஊழஎனை-19) நிவாரண உதவித் தொகை ரூ.4,000 வழங்க வேண்டியுள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் 09.01.2015 -ஆம் தேதிக்கு முன்னதாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்து காவல் நிலையங்களில் பதிவு செய்து கொண்டு வசித்து வருபவர்கள் மட்டுமேஇலங்கைத் தமிழர்களாக கருதப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இலங்கை தமிழர் குடும்பங்களைச் சார்ந்த நபர்கள் தங்களது விவரங்களை கோவிட்-19 நிவாரண உதவித் தொகை ரூ.4,000 பெற தாமாகவே முன்வந்து காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுடன் தங்களது எல்லைக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திலும் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் (இலங்கை தமிழர் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலம் தனிவட்டாட்சியர் பிரிவிலும்) அலுவலகத்திலும் விண்ணப்பித்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Updated On: 14 Oct 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?