/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் வருகிற 14.05.2022 அன்று நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம்
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் வருகிற 14.05.2022 அன்று நடைபெறவுள்ளது.

பொது விநியோகத்திட்டத்தில் காணப்படு;ம் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரத்தில் சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1மணி வரை குடும்ப அட்டைகள், நியாயவிலைக் கடை தொடர்பான குறைகள் தீர் முகாம்; அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடைய தனி வட்டாட்சியர் (கு.பொ.வ)-வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் வருகிற 14.05.2022 அன்று நடைபெற உள்ளது.

மேற்படி கூட்டத்தில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை , நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைபேசி எண் பதிவு மாற்றம் ஆகிய சேவைகளை வேண்டி முகாமில் கோரிக்கையினை அளிக்கும் பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்பாக நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள், தனியார் சந்தையில் விற்;கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 -இன் படி மேற்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Updated On: 12 May 2022 3:30 PM GMT

Related News