Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் : வழங்கிய அமைச்சர்கள்
புதுக்கோட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு, உபகரணங்கள் மற்றும் மருத்துவ பொருட்களை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கினர்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை நகராட்சி குட்பட்ட புதுக்குளம் பூங்கா பகுதியில் இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் புது குளக்கரையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் இன்று மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
பின்னர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் மற்றும் மருத்துவ பொருள்களை பணியாளர்களுக்கு வழங்கினர்
இந்த நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா , வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் ,நகர கழக செயலாளர் நைனா முகமது, மாவட்ட பொருளாளர் செந்தில், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.