/* */

வடமாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்த நகர காவல் ஆய்வாளர்

உரிய நேரத்தில் தங்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்த காவல்துறைக்கு வடமாநில தொழிலாளர்கள் கும்பிட்டு நன்றி தெரிவித்தனர்

HIGHLIGHTS

வடமாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்த நகர காவல் ஆய்வாளர்
X

வடமாநில தொழிலாளர்களுக்கு  வாகன உதவி செய்த நகர காவல் ஆய்வாளர் குருநாதன்

ரயில் நிலையம் செல்வதற்காக தவித்துக்கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்களை போலீஸ் வாகனம் மூலம் நகர காவல் ஆய்வாளர் குருநாதன் அனுப்பி வைத்து உதவி செய்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் படிப்படியாக ஊரடங்கு உத்தரவு களையும் அமல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஒடிசா மாநிலத்திலிருந்து புதுக்கோட்டையில் கட்டுமான பணிக்காக நேற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 16 பேர் தமிழகததில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மீண்டும் தங்களது சொந்த மாநிலத்திற்கு ரயில் மூலம் செல்ல முடிவு செய்து பயணம் புறப்பட்டனர்.

புதுக்கோட்டை போஸ் நகரில் இருந்து ரயில் நிலையத்திற்கு நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்களை புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த, நகர காவல் ஆய்வாளர் குருநாதன் தலைமையிலான போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, ரயிலுக்கு இன்னும் சிறிது நேரமே இருப்பதாக கூறினர். இதனால், வட மாநில தொழிலாளர்கள் உரிய நேரத்தில் ரயில்வே நிலையம் செல்ல வேண்டும் என்பதற்காக தங்களது காவல் வாகனம் மூலம் அனுப்பி உதவி செய்தனர்.

உரிய நேரத்தில் தங்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்த காவல்துறைக்கு வடமாநில தொழிலாளர்கள் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி தெரிவித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Updated On: 9 Jan 2022 12:18 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை