புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதி ஏற்பு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் அரசு ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதி எடுத்துக் கொண்டனர்
HIGHLIGHTS
தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற உடன் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், தந்தை பெரியாரின் பிறந்த நாள் இனி சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். அத்துன், அன்றைய நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.உறுதிமொழியை கவிதா ராமு வாசித்தார். அரசு அலுவலர்கள் அதை வாசித்து சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.