புதுக்கோட்டையில் (செப். 21) வியாழக்கிழமை மின்தடை
புதுக்கோட்டை துணை நிலையப்பகுதியில் வரும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது
HIGHLIGHTS

பைல் படம்
புதுக்கோட்டை திருவப்பூர் துணை மின் நிலையத்திவ் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படுவதால் வரும் வியாழக்கிழமை (செப்.21) மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் இராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர்,லெட்சுமி நகர், பாரி நகர்,
சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக் கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி.லெனாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் வரும் (21.09.2023) வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரிய புதுக்கோட்டைநகர்(இயக்கலும், காத்தலும்) உதவி செயற் பொறியாளர் ச. கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.