/* */

தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வு: மாணவர்களை தயார் படுத்தும் பணி தொடக்கம்

தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத இருப்பவர்களுக்கு வாட்ஸ்ஆப் அஞ்சல் குழு அமைக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வு:  மாணவர்களை தயார் படுத்தும் பணி தொடக்கம்
X

மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி குறிப்பேடு வழங்கிய அறிவியல் ஆசிரியர் ப.மகேஸ்வரன் 

புதுக்கோட்டை மாவட்டம், மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வு எழுதவுள்ள மாணவர்களை வீடுகளிலேயே தயார் படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, புதுக்கோட்டை அருகிலிலுள்ள மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ப.மகேஸ்வரன் தெரிவித்தாவது:

புதுக்கோட்டை அருகே மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் இந்த கல்வி ஆண்டில்(2021-2022)நடைபெற இருக்கும் தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத இருப்பவர்களுக்கு வாட்ஸ்ஆப் அஞ்சல் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத இருப்பவர்கள் விடுபட்டு இருந்தால் உடனடியாக இந்தக்குழுவில் இணைந்து கொள்ளலாம்.

மேலப்பட்டி ஊராட்சில் உள்ள மாணவர்களின் இல்லங்களில் நான்கு இடங்களில் முதல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. தேர்வுக்கு தேவையான குறிப்புகள், வழிகாட்டுதல்கள், முந்தைய தேர்வு வினா விடைகள் மாதிரித் தேர்வு பயிற்சி வினாக்கள், க்யூ ஆர் கோடு பயிற்சி வினாக்கள், பாடத்தின் முக்கிய குறிப்புகள், பாடத்தினை படிக்க உரிய வழிகாட்டுதல், பாடத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வினாக்கள் உருவாகக்கூடிய விதம் போன்ற பயிற்சிகள் தரப்பட்டு சில குறிப்பு நகல்களும் தரப்பட்டன. மேலும் மனத்திறன் வினாக்களுக்கு உரிய வினா-விடை குறிப்பு மற்றும் யூடியுப் வீடியோ ( youtube Video ) பார்க்கக் கூடிய வழிமுறைகளும் ஆசிரியர் அனுப்பக்கூடிய பிடிஎப்- பைல் (Pdf file)-ஐ பார்க்கக் கூடிய வழிமுறையும், முதல்கட்ட பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்பட்டன.

இந்தக்குழுவில், தினசரி பாடம் சார்ந்த குறிப்புகளும் வீடியோக்களும் பிடிஎப் பைல் -ஆக அனுப்பப்படும். ஆடியோ குறிப்பும் தரப்படும். தேவையான பாடத்தில் புரியாத பகுதிகளுக்கு உரிய விளக்கம், அந்தந்த பாட ஆசிரியர்கள் மற்றும் சிறந்த கல்வியாளர்களின் உரிய வழிகாட்டுதலும் அளிக்கப்படும். புரியாத பகுதிகளை இந்த குறிப்பிலேயே கேட்டு மாணவர்கள் தெளிவு பெறலாம் அல்லது நேரிலேயே அடுத்த பயிற்சி வகுப்பிற்கு வீட்டுக்கு வருகின்ற பொழுது கேட்டுத் தெளிவு பெறலாம். வலைதளங்கள் மூலம் நடைபெறும் ஆன்லைன் தேர்வில் பங்கேற்பதற்கான பயிற்சி பெற உரிய வழிகாட்டுதல் தரப்படும் என்றார் அவர்.

Updated On: 18 Aug 2021 6:10 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்