/* */

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாரத்தான்- சைக்கிள் பேரணி

நாட்டின் பெருமையை அறிந்து கொள்ளும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாரத்தான்- சைக்கிள் பேரணி நடைபெற்றது

HIGHLIGHTS

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாரத்தான் மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அனைவரும் சுற்றுலா தலங்களுக்குச் சென்று, நமதுநாட்டின் பெருமையை அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாரத்தான் மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு திடலில் இருந்து புறப்பட்ட மாரத்தான் போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதேபோன்று, சைக்கிள் பேரணியில் ஏராளமான சைக்கிள் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட விளையாட்டு அரங்கில் மாரத்தான் மற்றும் சைக்கிள் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தொடங்கி வைத்தார்.நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாரத்தான் மற்றும் சைக்கிள் பேரணி வந்து மீண்டும், மாவட்ட விளையாட்டு அரங்கை வந்தடைந்தது. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஏற்பாடு செய்திருந்தார்.


Updated On: 27 Sep 2021 11:49 AM GMT

Related News