/* */

மாணவர்களுக்கு சொந்தச் செலவில் புத்தகங்களை வாங்கிக்கொடுத்து வியக்க வைத்த அரசு அதிகாரி

கோட்டாட்சியர் கருணாகரன் தனது சொந்த நிதி ரூ.20 ஆயிரத்தில் புத்தகம் வாங்கி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பரிசாகக்கொடுத்தார்

HIGHLIGHTS

மாணவர்களுக்கு சொந்தச் செலவில் புத்தகங்களை வாங்கிக்கொடுத்து வியக்க வைத்த அரசு அதிகாரி
X

கோட்டாட்சியர் கி.கருணாகரன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்பில் புத்தகங்களை வாங்கி அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசாகக் கொடுத்தார் 

புத்தகத் திருவிழாவில் அரசு உயர் அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்தச்செலவில் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வியப்பில் ஆழ்த்தினார்.

புதுக்கோட்டை மாவட்டமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை நடத்தி வருகிறது. புத்தகத் திருவிழாவிற்கு தினந்தோறும் பல நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், வாசகர்கள் வருகைதந்து ஏராளமான புத்தகங்களை வாங்கிக் செல்கின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பள்ளிகள், கல்லூரிகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக புத்தகங்கள் வாங்குவதற்கும் ஏற்பர்டு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு உயர் அலுவலர் ஒருவர் தனது சொந்த நிதியில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை வாங்கி பரிசளித்த நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. புதுக்கோட்டை கோட்டாட்சியராக பொறுப்பு வகிப்பவர் கி.கருணாகரன். இவர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராகவும் உள்ளார். இவரது துறையின் கீழ் உள்ள கறம்பக்குடி தாலுகா, முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மற்றும் பிளாவிடுதி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.மேற்கண்ட பள்ளி மாணவர்களை வியாழக்கிழமை வரவழைத்த கோட்டாட்சியர் கி.கருணாகரன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்பில் புத்தகங்களை வாங்கி அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசாகக் கொடுத்து அசத்தினார்.

நிகழ்வில் கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி, தலைமை ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, சிங்காரவேலு, புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.டி.பாலகிருஷ்ணன், எம்.வீரமுத்து, எம்.முத்துக்குமார், அறிவியல் இயக்க நிர்வாகிகள் தியாகராஜன், சிவானந்தம், வீரபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும், கோட்டாட்சியர் கருணாகரன் புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு பலவகையிலும் உதவிபுரிந்து வருகிறார். இவரின் செயல்பாடுகளை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள், பத்திப்பகத்தார், வாசகர்கள், மாணவர்கள் ஆசிரியர்கள் மனதாரப் பாராட்டி வருகின்றன

Updated On: 4 Aug 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  2. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  6. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  7. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்