/* */

முடிந்தது எஸ்எஸ்எல்சி தேர்வு... உற்சாகத்துடன் வீடு திரும்பிய மாணவர்கள்

இந்த நிலையில் பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்ததால் மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்து செல்பி எடுத்துக்கொண்டனர்

HIGHLIGHTS

முடிந்தது எஸ்எஸ்எல்சி தேர்வு... உற்சாகத்துடன்  வீடு திரும்பிய மாணவர்கள்
X

புதுக்கோட்டையில் ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவிகள் 

எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வு தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று சமூக அறிவியல் பாடத்துடன் தேர்வு முடிவடைந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 119 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதினர்.

இந்த நிலையில் நேற்றுடன் பொதுத்தேர்வு முடிவடைந்ததால் மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர். செல்பி எடுத்தனர் புதுக்கோட்டையில் ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவிகள் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டு, கையசைத்தும் சென்றனர். மேலும் 'செல்பி' எடுத்தும் மகிழ்ந்தனர். சில மாணவிகள் பேனா மையை சக மாணவிகள் மீதும் தெளித்தும் மகிழ்ந்தனர். பிளஸ்-1 வகுப்பிற்கு பொதுத்தேர்வு செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 Jun 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...