புதுக்கோட்டை அருகே பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி மறியல்
புதுக்கோட்டை அருகே பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டம் புல்வயல் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மற்றும் சரிதா ஆகிய இருவர் மீது இடப் பிரச்சினை காரணமாக சாந்தி என்பவர் அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் ராமசாமி மற்றும் சரிதா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கிற்கும் ராமசாமி மற்றும் சரிதாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அவர்களை வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும் பொய்யான புகார் அளித்த சாந்தி மற்றும் அவருடைய கணவர் உலகப்பனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புல்வயல் உள்ளிட்ட 18 பட்டி கிராம நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் புதுக்கோட்டை குடுமியான்மலை சாலையில் புல்வயல் கிராமத்தில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அன்னவாசல் காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்பட்டு பொய்யான புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.