/* */

வெறி நாய் கடித்து குதறியதில் கூடாரத்தில் இருந்த 15 ஆடுகள் பலி

விராலிமலை அருகே நாய்கள் கடித்து குதறியதில் 15 ஆடுகள் பலியாகின.

HIGHLIGHTS

வெறி நாய் கடித்து குதறியதில் கூடாரத்தில் இருந்த 15  ஆடுகள் பலி
X

விராலிமலை அருகே கூடாரத்தில் இருந்த ஆடுகளை வெறிநாய் கடித்து குதறியதில் பலியான ஆடுகள்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள மதயானைபட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர், செம்மறி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். விராலிமலை அருகே புதுவயல் கிராமத்தில் கூடாரம் அமைத்து, 60-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு பின் அடைத்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு தெருநாய்கள், ஆட்டு கூடாரத்தில் புகுந்து ஆடுகளை கடித்து குதறியுள்ளன. ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு அருகே விவசாய பணியில் ஈடுபட்டிருந்த ஜெயராமன் உள்ளிட்ட குடும்பத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, 2 நாய்கள் ஆடுகளை கடித்து கொண்டிருந்துள்ளன.

உள்ளே சென்று பார்த்தபோது 17 செம்மறி ஆடுகளை, நாய்கள் கடித்து குதறியது தெரியவந்தது. மேலும் ஆடுகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. நாய்கள் ஆடுகளை கடித்து குதறிய சம்பவம் ஆட்டின் உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 28 Feb 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...