Begin typing your search above and press return to search.
தேமுதிக வட்டச் செயலாளர் செல்வராஜ் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்
உசிலங்குளம் பகுதி 33 வது வார்டு,தேமுதிக வட்டச் செயலாளர் செல்வராஜ் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட உசிலங்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் 33 வது வார்டு தேமுதிக வட்டச் செயலாளராக செயலாற்றி வந்தார். இந்நிலையில் செல்வராஜ் தேமுதிக கட்சியிலிருந்து விலகி பாஜக மாவட்டத் துணைத் தலைவரும் நகராட்சித் தேர்தல் பொறுப்பாளருமான ஏவிசிசி கணேசன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவசாமி,ரெங்கசாமி,மாவட்ட துணைத் தலைவர் காடுவெட்டி குமார்,மாவட்டச் செயலாளர்கள் விஜயகுமார்,வீரன் சுப்பையா, நகரத் தலைவர் சுப்பிரமணியன், தொழில் பிரிவு மாநிலச் செயலாளர் செல்வ அழகப்பன்,மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் மணிராஜன்,மாவட்ட தொழில் பிரிவு தலைவர் சீனிவாசன்,மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் மணிசுந்தரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.