/* */

புதுக்கோட்டை: கோயில் திறப்பதற்கு உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பக்தர்கள் நன்றி

கோயில்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததையடுத்து இந்தத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது

HIGHLIGHTS

புதுக்கோட்டை:  கோயில் திறப்பதற்கு உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பக்தர்கள் நன்றி
X

புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவிலில் இன்று அம்பு போடும் நிகழ்வில் சந்திரசேகரர் சுவாமி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

புதுக்கோட்டையில் கோயில்களை வெள்ளி,சனி, ஞாயிறு கிழமைகளில் திறப்பதற்கு உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.

புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி அம்பாள் உடனுறை சாந்தநாத சுவாமி திருக்கோயிலில் நவராத்திரி விழா நிறைவு நாளன்று அம்பாள் அம்பு போடும் விழா நடைபெற்றது. அரக்கர்களை அழிப்பதற்காக அம்பாள் நவராத்திரி விரதம் இருந்து நிறைவு நாளன்று குதிரை வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி நான்கு திசைகளில் இருந்து வரும் அரக்கர்களை அழிப்பதற்காக 50 அரக்கர்களை கொன்று பூமியில் உள்ள உயிர்களை காத்தருள்கிறார் என்று அம்பாள் திருவிளையாடல் புராணங்களில் கூறப்படுகிறது.



புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி அம்பாள் உடனுறை சாந்தநாத சுவாமி திருக்கோவில் முன்பாக அம்பாள் எழுந்தருளி அம்பு போடும் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை நகரத்தார் சங்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் நடைபெறாமல் இருந்த திருவிழாவை நடத்தும் வகையில், கோயில்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததையடுத்து விழா விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவுக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.


Updated On: 15 Oct 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்