/* */

கல்குவாரியை மூடக்கோரி சிபிஎம் தலைமையில் கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

கல்குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசியினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

HIGHLIGHTS

கல்குவாரியை மூடக்கோரி சிபிஎம் தலைமையில் கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்
X

கல்குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசியினர் தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவிலை அடுத்த வத்தனாக்குறிச்சி ஊராட்சியில் சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசியினர் தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வத்தனாகுறிச்சி ஊராட்சியில் வெவ்வயல்ப்பட்டி மற்றும் வத்தனாகுறிச்சி ஆதிதிராவிடர் கூட்டு குடியிருப்புகள் உள்ளனர். இதன் அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சோத்துப்பாலை முருகேசன் என்பவர் எம்எம் கிர~ர் என்ற பெயரில் கிர~ர், தார் பிளான்டுடன் கூடிய கல் குவாரி நடத்தி வருகிறார்.

மக்களுக்கு பாதிப்பு:

இந்நிலையில் இந்த கல்குவாரி அரசு விதிகளை மீறி செயல்படுவதாகவும், குவாரியில் வைக்கப்படும் வெடியால் அதிர்வு ஏற்பட்டு குடியிருப்புகளில் விரிசல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த அதிர்வினால் குழந்தைகள்; மனதளவில் பாதிப்பை சந்தித்து வருவதாகவும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த கல்குவாரி மற்றும் தார் பிளாட்டிலிருந்து வரும் தூசி மற்றும் புகையினால் காற்று மாசு ஏற்பட்டு பொது மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுவதாகவும் விவசாயம் பாதிக்கப் படுவதோடு கண்மாய்கள், குடிதண்ணீரும் மாசுபடுவதால் வத்தனாக்குறிச்சி, வெவ்வயல்ப்பட்டி வத்தனாக்குளிச்சிகாலனி, சத்திரப்பட்டி, தண்ணீர்பந்தல்ப்பட்டி, கதிரேசன்நகர், புதுவயல், திருமலைராயபுரம், உடையாம்பட்டி, சூசையப்பர்பட்டினம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.இதனால், மேற்படி எம்.எம். கிரஷரை மூடக்கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் வருவாய் துறையினருக்கும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கோரிக்கைளை புறக்கணிக்கும் மாவட்ட நிர்வாகம்:

இந்நிலையில் இந்த கிரஷரை மூடக்கோரி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் சாலைமறியல் போராட்டமும், அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கிரஷரை முற்றுகையிட்டுப் போராட்டமும் நடைபெற்றது. இருப்பினும் அந்த கிரஷர் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து வியாழக்கிழமை முதல் குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு:

மேலும், எம்எம் கிரஷர் பட்டா இடத்தில் மட்டுமல்லாமல் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்திலும் கடந்த 15 ஆண்டு காலமாக கற்களை வெட்டி எடுத்து கனிமக் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும், இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருவதாகவும் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் இந்த எம்.எம் கிரஷரை உடனடியாக மூட தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தக் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பிர் ஏ.ஸ்ரீதர் தலைமை வகித்து வருகிறார். போராட்டத்தில் கலந்துகொண்டு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பிhன் எம்.சின்னதுரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

போராட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.அன்புமணவாளன், சு.மதியழகன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல், ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.கலைச்செல்வன், டி.லட்சாதிபதி, ஒன்றியக் கவுன்சிலர் சூசைமேரி சூசை, ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா மாயழகு, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் எம்.மைக்கேல், துணைத் தலைவர் மெட்டில்டா பால்ராஜ் உள்ளிட்டோர் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சட்டவிரோமாக செயல்படுவதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள்:

எம்.சின்னதுரை எம்எல்ஏ பேசும்போது, இந்தக்குவாரி சட்டவிரோதமாக செயல்படுகிறது, அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமித்துள்ளது என்று கண்டுபிடித்து சொன்னதே வருவாய்த்துறையினர்தான். சாதாரணமாக ஒரு செண்ட் புறம்போக்கு இடத்தில் குடியிருக்கும் ஏழை மக்களை ஆக்கிரமிப்பு என்று இடித்து அப்புறப்படுத்தும் வருவாய்த்துறையினர் எம்.எம். கிரஷர் புறம்போக்கு நிலத்தை வளைத்துப்போட்டு கொள்ளையடிப்பதை எப்படி அனுமதிக்கிறது. கிராம மக்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

கம்யூனிஸ்டுகளை விலைக்கு வாங்க முடியாது:

சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் பேசும்போது, சட்ட விரோதமாக செயல்பட்டதால்தான் இந்தக் குவாரி எங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து இரண்டு முறை மூடப்பட்டது. தற்பொழுது நீதிமன்றத்தில் பொய்யான தகவலைத் தெரிவித்து ஆலை இயக்கப்படுகிறது. இதனை எதிர்த்து மாவட்ட நிர்வாகம் நீதிமன்றத்தில் முறையிட்டு இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. குவாரி முதலாளி முருகேசன் என்பவர் அதிகாரிகள், அரசியல் வாதிகளை சரிக்கட்டி விட்டோம்..அதனால், எங்களை யாரும் தடுக்க முடியாது என்று கொக்கரித்து வருவாதாக செய்திகள் வருகிறது. அவர்கள் யாரை வேண்டுமானாலும் சரிக்கட்டலாம். செங்கோடி இயக்கத்தை சேர்ந்த நாங்கள் ஒருபோதும் சோரம் போக மாட்டோம். சட்ட விரோமாக செயல்படும் இந்த ஆலையை நிரந்தரமாக மூடும் வரை ஓயமாட்டோம் என்றார்.

போராட்டக்களத்திலேயே உணவு சமையல்:

போராட்டத்திற்கு இடையில், கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு ஏற்கனவே, இரண்டு முறை இதே அதிகாரி தலைமையில்தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கொடுத்த வாக்குறுதியை அவர்கள் காப்பாற்றவில்லை.எனவே, குவாரி நிரந்தரமாக மூடப்படுகிறது என்கிற அறிவிப்பு வரும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் எனக்கூறி போராட்டக் குழுவினர் மறுத்து விட்டனர். போட்டக் களத்திலேயே அவர்கள் உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Updated On: 22 Sep 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்