/* */

புதுக்கோட்டையில் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார் 165 பேர் கைது

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார் 165 பேர் கைது
X

மத்திய அரசைக்கண்டித்து புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் எதிரில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 165 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய பா ஜ க அரசின் தவறான பொருளாதார கொள்கை , பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அமலாக்கத்துறை மற்றும் அரசு நிர்வாகத்தில் எதேச்சாதிகார போக்கு, பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு தற்போதைய ஜிஎஸ்டி வரிவிதிப்பு , பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி குரலை தடை செய்தல் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வு போன்ற ஜனநாயக மக்கள் விரோத போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டைபுதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட தலைவர்கள் வி.முருகேசன் மற்றும் ராம.சுப்புராம் ஆகியோர் தலைமையில் கண்டன முற்றுகை போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் ஈடுபட்ட, நிர்வாகிகள் வழக்கறிஞர் ஏ. சந்திரசேகரன், ஏ.எம்.எஸ். இப்ராஹிம்பாபு, ஆரோக்கியசாமி, செம்பை மணி, மா. தமிழ்ச்செல்வன், நகர்மன்ற உறுப்பினர் ராஜாமுகமது, சூர்யாபழனியப்பன், பன்னீர்செல்வம், பாரூக், பொன்னமராவதி எஸ்பி. ராஜேந்திரன், முத்து, அரிமளம் முகமது இப்ராஹிம் உள்பட 165 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.

Updated On: 5 Aug 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  3. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  4. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  5. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  7. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  8. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  9. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  10. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...