வள்ளலார் மாணவர் இல்லத்தில் தரைத்தளம் அமைத்துக்கொடுத்த சிட்டி ரோட்டரி சங்கம்
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மாத்தூர் வள்ளலார் மாணவர் இல்லத்தில் ரூ.1.25 லட்சத்தில் தரைதளம் அமைக்கப்பட்டது
HIGHLIGHTS
சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் தரைதளம் அமைத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக மாத்தூர் வள்ளலார் மாணவர் இல்லத்திற்கு சுமார் ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் செலவில் தரைதளம் அமைத்து அதை பயன்பாட்டிற்கு வழங்கும் விழா சங்கத் தலைவர் மருத்துவர் ஜி. மாரிமுத்து தலைமை வகித்து தரைதளத்தை பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பட்டயத் தலைவர் க. நைனாமுகமது, வருங்கால தலைவர் ஆர். சிவக்குமார், மேனாள் தலைவர்கள் கண.மோகன்ராஜா, பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் வள்ளலார் மாணவர்கள் இல்ல தலைவர் மருத்துவர் இராமதாஸ் வரவேற்று, ரோட்டரி நிர்வாகிகளை கெளரவித்தார்.ரோட்டரி மாவட்டம் 3000தின் மேனாள் ஆளுனர் சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பிரபு, கதிரவன், சுந்தரம், செந்தில், விஜயகுமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக சங்க பொருளாளர் செந்தில்வேல் நன்றி கூறினார்.