புதுக்கோட்டையிலுள்ள அரசு பள்ளிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி திடீர் ஆய்வு
பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் வருகை பதிவு, மாணவர்கள் வருகை பதிவேடுகளை ஆய்வுசெய்தார்
HIGHLIGHTS
அரசு பள்ளிகளில் முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி எவ்வித முன் அறிவிப்பும் இன்றி நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு நடைபெற்று வரும் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வக அடிப்படை பயிற்சியினை பார்வையிட்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.அதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பதிவு, வருகை, மாணவர்கள் பதிவு, வருகை, அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கற்றல், கற்பித்தல் நடைபெறுவது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.