/* */

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் பள்ளியில் புத்தகம் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் பள்ளியில் புத்தகம் வெளியீட்டு விழா
X

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று பள்ளியில் பணியாற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் இரா.இராஜநாராயணன் எழுதிய வைகைபுயல் வடிவேலு மற்றும் எண்ணமும் ஏற்றமும் ஆகிய தலைப்புகளில் எழுதிய புத்தகங்களை என்று ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது .

புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் திமுக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவருமான பெரியண்ணன் அரசு புத்தகத்தை வெளியிட அதனை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமிசத்தியமூர்த்தி முதல் பிரதியை பெற்றுக் கொண்டு வெளியிட்டார்கள். மேலும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெரியண்ணன் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் தலைமையாசிரியர் தமிழரசி மற்றும் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் துரை சுப்பு ஊராட்சி மன்ற தலைவர் தாஞ்சூர் கண்ணன் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளரும் ஊராட்சிமன்றத் துணைத் தலைவருமான ரமேஷ் ,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் சின்னையா, முத்துக்கருப்பன், ஆசிரியர்கள் நெடுஞ்செழியன், முத்துக்கருப்பன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முருகானந்தம், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரி, மற்றும் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் பலர் புத்தகம் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

புத்தகம் வெளியீட்டு விழாவில் புத்தகத்தை எழுதிய முதுகலை பட்டதாரி ஆசிரியர் இராஜநாராயணன் எழுதிய வைகைபுயல் வடிவேலு மற்றும் எண்ணமும் ஏற்றமும் ஆகிய புத்தகங்களை ஒன்றாக சேர்த்து மாலையாக அணிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 Sep 2021 8:39 AM GMT

Related News