/* */

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்: எம்பி அப்துல்லாவிடம் மனு

புதுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கம்- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் ஆகிய இரு சங்கங்களின் நிர்வாகிகள் மனு அளித்தனர்

HIGHLIGHTS

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்:  எம்பி அப்துல்லாவிடம் மனு
X

புதுக்கோட்டையில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என.    மாநிலங்களவை எம்பி  அப்துல்லாவிடம் மனு அளித்த சங்க  நிர்வாகிகள்

புதுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் ஆகிய இரு சங்கங்களின் நிர்வாகிகள் இன்று ரோஜா இல்லத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லாவிடம், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்கள் குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில், புதுக்கோட்டை கீழராஜ வீதியில் குறுகிய சாலைகள் உள்ளதால் போக்குவரத்தினை சரி செய்வதற்காக மாற்று வழிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் .புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் மினி பேருந்து இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அதேபோல், ரயில் நிலையத்தில் கழிப்பிட வசதி குடிநீர், கேண்டின் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலங்களவை எம்பி அப்துல்லாவிடம் மனு அளித்தனர். இந்த நிகழ்வில், ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஆர்.சிவக்குமார் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் மோகன்ராஜ், சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஏ.சந்திரசேகரன், நிர்வாகிகள் இப்ராகிம் பாபு, க.நைனாமுகமது உள்பட பலர் உடனிருந்தனர்.

.

Updated On: 17 Sep 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!