/* */

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பாட்டு பாடி வியப்பில் ஆழ்த்திய விழியிழந்த மாணவர்

ஜெயலலிதா பிறந்தநாளை புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் பள்ளியில் கொண்டாடிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பாட்டு பாடி வியப்பில் ஆழ்த்திய விழியிழந்த மாணவர்
X

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர்  அரசு பார்வையற்றோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாக்லேட் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினார் அப்போது அப்பள்ளியில் படிக்கும் 5 வயது கண் பார்வையற்ற மாணவன் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன் திரைப்பட பாடலை பாடி அசத்தினார்

ஐந்து வயது கண் பார்வை தெரியாத மாற்றுத்திறனாளியான சிறுவன் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்ற பாட்டு பாடி அசத்தல்.. முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா நாளை அதிமுகவினரால் கொண்டாடப்படுகிறது .ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் பள்ளியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடினர்.

அரசு பார்வையற்றோர் பள்ளிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜயபாஸ்கர் வழங்கியதோடு சிறுவர்களுக்கு இனிப்புகள் பேனா பென்சில் நோட்டு ஆகியவற்றை வழங்கினார்.அப்போது பார்வை தெரியாத மாற்றுத்திறனாளி 5 வயது சிறுவனிடம் நலம் விசாரித்த விஜயபாஸ்கர், சிறுவனிடம் எதற்காக நாங்கள் வந்துள்ளோம் என்று தெரியுமா என்றுகேட்டார் அப்போது அம்மா பிறந்தநாளுக்காக நீங்கள் வந்துள்ளீர்கள் என்று சிறுவன் கூறினான்.

இதன் பின்னர் சாக்லேட் ஒன்றை எடுத்து சிறுவனிடம் வழங்கிய விஜயபாஸ்கர், சிறுவன் சாக்லெட்டை சாப்பிட்டு முடித்தவுட,ன் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்ற திரைப்பட பாடலை முழுவதுமாக விஜயபாஸ்கர் முன்னிலையில் பாடி அசத்தினார்.சிறுவனின் திறமையை பாராட்டிய விஜயபாஸ்கர் கண் பார்வை தெரியாத ஐந்து வயது சிறுவனுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார். இதன் பின்னர் கண் பார்வையற்றோர் பள்ளிக்குநன்கொடையையும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

Updated On: 23 Feb 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  5. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  6. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  7. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  8. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  10. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...