முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பாட்டு பாடி வியப்பில் ஆழ்த்திய விழியிழந்த மாணவர்
ஜெயலலிதா பிறந்தநாளை புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் பள்ளியில் கொண்டாடிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
HIGHLIGHTS
ஐந்து வயது கண் பார்வை தெரியாத மாற்றுத்திறனாளியான சிறுவன் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்ற பாட்டு பாடி அசத்தல்.. முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா நாளை அதிமுகவினரால் கொண்டாடப்படுகிறது .ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் பள்ளியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடினர்.
அரசு பார்வையற்றோர் பள்ளிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜயபாஸ்கர் வழங்கியதோடு சிறுவர்களுக்கு இனிப்புகள் பேனா பென்சில் நோட்டு ஆகியவற்றை வழங்கினார்.அப்போது பார்வை தெரியாத மாற்றுத்திறனாளி 5 வயது சிறுவனிடம் நலம் விசாரித்த விஜயபாஸ்கர், சிறுவனிடம் எதற்காக நாங்கள் வந்துள்ளோம் என்று தெரியுமா என்றுகேட்டார் அப்போது அம்மா பிறந்தநாளுக்காக நீங்கள் வந்துள்ளீர்கள் என்று சிறுவன் கூறினான்.
இதன் பின்னர் சாக்லேட் ஒன்றை எடுத்து சிறுவனிடம் வழங்கிய விஜயபாஸ்கர், சிறுவன் சாக்லெட்டை சாப்பிட்டு முடித்தவுட,ன் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்ற திரைப்பட பாடலை முழுவதுமாக விஜயபாஸ்கர் முன்னிலையில் பாடி அசத்தினார்.சிறுவனின் திறமையை பாராட்டிய விஜயபாஸ்கர் கண் பார்வை தெரியாத ஐந்து வயது சிறுவனுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார். இதன் பின்னர் கண் பார்வையற்றோர் பள்ளிக்குநன்கொடையையும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.