/* */

நெல் பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோயினை கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை

நெல் சாகுபடியில் பாக்டீரியா இலைக்கருகல் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தி உயர் விளைச்சலை விவசாயிகள் பெற்றிடலாம்

HIGHLIGHTS

நெல் பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோயினை கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை
X

நெற்பயிரை தாக்கும்  பாக்டீரியா நோய்

நெல் சாகுபடியில் பாக்டீரியா இலைக்கருகல் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தி உயர் விளைச்சல் பெற்றிடுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:பொதுவாக இரவில் நிலவும் குளிர்ச்சி மற்றும் காற்றிலுள்ள அதிக ஈரப்பதம் ஆகியவற்றால், தற்போது நடவு செய்யப்பட்டுள்ள சம்பா பயிரில் பாக்டீரியா இலைக் கருகல் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நோயானது இளம் பயிரைத் தாக்கும்போது 60 சதவீதத்திற்கு மேல் சேதம் விளைவிக்கும்.

இந்நோiயினை பரப்பும் பாக்டீரியா பாசன நீர் மூலமாகவும், பாதிக்கப்பட்ட பயிரின் மேல் மழைநீர் பட்டு வழிந்தோடுவதாலும், பெருங்காற்று வீசும்போது பயிர்கள் ஒன்றோடொன்று உரசுவதால் உண்டாகும் காயத்தாலும பரவுகிறது.

காற்றுடன் தொடர்ந்து பெய்யும் மழைத்தூறல், மந்தமான தட்பவெப்பநிலை அதாவது 25 முதல் 30 டிகிரி செல்சியஸ்; நிலவுதல், காற்றினில் ஈரப்பதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக இருத்தல் ஆகியன இந்நோய் பரவுவதற்கு உகந்த சூழல்களாகும். நிழலான பகுதிகள், நெருக்கமாகப் பயிரிடப்பட்டு தழைச்சத்து அதிகமாகவும் சாம்பல் சத்து குறைவாகவும் இடப்பட்ட வயல்கள் போன்றவற்றிலும் இதன் தாக்குதல் அதிகம் காணப்படும்.

இலையின் ஓரத்தில் வட்ட வடிவ மஞ்சள நிறப் புள்ளிகள் தோன்றி அடுத்தடுத்து இருக்கும் புள்ளிகளுடன் இணைந்து அளவில் பெரியதாகி, இலை முழுவதும் மஞ்சள் நிறமாகிக் காய்ந்து பின்பு உதிர்ந்து விடும். வளர்ந்தபயிர்களில் இலையின் நுனிப்பகுதியானது மஞ்சள் அல்லது வெளிறிய மஞ்சள் நிறத்துடன் நீரில் நனைந்த கீற்றுகளாக மாறத் தொடங்கி, பின்பு அளவில் பெரிதாகி வைக்கோல் நிறமாகி, இறுதியில் பழுப்பு நிறக் காய்ந்த கோடுகளாகக் காட்சியளிக்கும். தாக்குதல் அதிகமானால் இலை முழுவதும் காய்ந்து விடும்.

அடித்தாள்கள், வைக்கோல் மற்றும் நெற்கழிவுகளில் இந்த பாக்டீரியாவானது நெடுங்காலம் உயிர் வாழும் தன்மை கொண்டதால் அவற்றை அழித்துவிட வேண்டும். அருகம்புல், கோரை ஆகிய களைகள் இந்நோய்க்கு மாற்று உறைவிடமாக இருக்கும். எனவே அந்தக் களைகளை முற்றாக அழித்து விட வேண்டும்.

நோய் தாக்கப்பட்ட இலைகளை அல்லது பயிரினைப் பறித்து அழித்து விட வேண்டும். இதனால் மற்ற பயிர்களுக்கு இந்நோய் பரவாது. நோய் தாக்கப்பட்ட வயல்களிலிருந்து அருகிலிருக்கும் வயல்களுக்குக் கண்டிப்பாக நீர் பாய்ச்சுதல் கூடாது. மேலும், வயலில் அதிகமாக நீர் நிறுத்தவும் கூடாது.

நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் 20 சதவீதப் பசுஞ்சாணக் கரைசல் தெளிக்க வேண்டும். இதற்கு ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் நீரில் நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊற வைத்து, மறு நாள் காலையில் அதனை வடிகட்டிப் பெறப்படும் தெளிந்த கரைசலுடன் 100 லிட்டர் நீரைக் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

தாக்குதல் அதிகமாகக் இருந்தால் காப்பர் ஆக்சிகுளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்டெரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்ளின் கலவை 120 கிராம் ஆகிய மருந்துக் கலவையினை 200 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.


Updated On: 13 Dec 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்