/* */

விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
X

மத்தியஅரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 101 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் விவசாயிகள் 100 நாட்களை கடந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு அகில இந்திய அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இன்று 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைகளில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மத்தியஅரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை மத்தியஅரசு அழைத்து பேச வேண்டும் எனக் கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Updated On: 6 March 2021 10:15 AM GMT

Related News